ராயபுரத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அங்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
இதையும் படிக்க.. நெஞ்சை பதற வைக்கும் பிகாரின் திருட்டுக் கிராமம்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 20 பொருள்கள் அடங்கிய அரசின் சிறப்பு பொங்கல் தொகுப்பு நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை ராயபுரத்தில் உள்ள நியாயவிலைக் கடைக்கு வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கும் பணியை நேரில் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.
அப்போது, நியாயவிலைக் கடையில் முகக்கவசம் அணியாமல் இருந்த மக்களுக்கு முகக்கவசம் வழங்கி, முகக்கவசத்தின் அவசியம் குறித்து அறிவுரை கூறினார்.