சங்ககிரி: சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லபராஜப்பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசியையொடட்டி பரமபதவாசல் திறப்பு விழா வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது.
வைகுந்த ஏகாதசியையொட்டி ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லபராஜப்பெருமாள் கோயிலில் அருள்மிகு வசந்தவல்லபராயபெருமாள் சுவாமிக்கு அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு உற்சவ மூத்தி சுவாமி கருடவாகனத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்டார்.
பின்னர் மார்கழி மாத தினசரி வழிபாடான திருப்பாவை பாடல்களை பாடிய பின்னர் சுவாமி அதிகாலை பரமபதவாசல் வழியாக வெளியே வந்தார். வெளியே வந்த சுவாமியை பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் முழங்க வரவேற்று வழிபட்டனர். அதனையடுத்து அர்ச்சகர்கள் சுவாமி பரமபதவாசல் வழியாக வந்தப்பின்னர் பெருமாள் சிறப்பு பக்தி பாடல்களை பாடினர்.
இதனையடுத்து சுவாமி கோயில் வெளி பிரகாரத்தில் வலம் வந்து ஆலயத்தை அடைந்தது. சுவாமி பரதபதவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த போது மகளிர் சுவாமிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்று வழிப்பட்டனர்.