சங்ககிரி: தை பொங்கலையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி, பழைய எடப்பாடி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சங்ககிரி மதுரைவீரன் சுவாமிக்கு வெள்ளிக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
ஸ்ரீ ஓங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் தை பொங்கலையொட்டி சுவாமிகளுக்கு அதிகாலையிலேயே பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இதையும் படிக்க | திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு பாரம்பரிய மண்பானைப் பொங்கல்
கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகளையொட்டி கோயில் பூசாரி மட்டுமே பூஜைகளை செய்தார்.