வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மாட்டுப் பொங்கல் விழாவை இன்று (ஜன.15) கொண்டாட விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.
வேதாரண்யம் பகுதியில் மாலையில் கொண்டாடப்படவுள்ள மாட்டுப் பொங்கலையைட்டி, கால்நடைகளை குளிப்பாட்டி, குங்கும பொட்டு வைத்து அலங்கரிக்கப்படுகிறது.
கொம்புகளுக்கு வண்ணம் தீட்டுவது, குஞ்சம், மாலை, சலங்கை , புதுக் கயிறுகள், சலங்கை, மணி, திருஷ்டி கயிறு, சங்கு, போன்றவைகளை சந்தையில் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.