தமிழகத்தில் வரும் 22ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் வரும் சனிக்கிழமை ஜனவரி 22ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்


சென்னை: தமிழகத்தில் வரும் சனிக்கிழமை ஜனவரி 22ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது, தமிழகத்தில் வரும் 22ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் மையங்களில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

நந்தம்பாக்கம் கரோனா சிகிச்சை மையத்தில் மொத்தம் 700 படுக்கைகள் உள்ளன. நந்தம்பாக்கம் மையத்தில் தற்போது கரோனா நோயாளிகள் 90 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும், மொத்தமுள்ளவற்றில் 350 படுக்கைகள் காவல்துறையினர், அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com