சேலம்: ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 113.82 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1926 கன அடியிலிருந்து 1975 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க.. தாமதமாகும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்: எப்போது வெளியாகும்?
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நேற்று மாலை நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 83.95 டி.எம்.சி.யாக இருந்தது.