சென்னை: தமிழகத்தில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,
தமிழகத்தில் இன்று தமிழக வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கனமழையைப் பொறுத்தவரை திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும்.
நாளை, தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், தமிழத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் 2 நாளக்ளுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூர், அம்பத்தூரில் (திருவள்ளூர் மாவட்டம்) தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.