ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு முன்னாள் அமைச்சரும் நகரச் செயலாளருமான இன்பத்தமிழன் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்தையா மாவட்ட கவுன்சிலர் கணேசன் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி மருகன் ஒன்றிய செயலாளர் மயில்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.