எல்.ஐ.சி. பங்கு விற்பனை முடிவைக் கைவிட வேண்டும் என்று மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
எல்.ஐ.சி. தேசியமயமான நாளான நாளையொட்டி மதுரை தொகுதி எம்.பி. சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். அதில், தேசம் பொருளாதார வெயிலில் வியர்த்து திணறும் போது அடர்ந்த நிழலைத் தந்து ஆசுவாசப்படுத்துகிற எல்.ஐ.சி என்ற ஆலமரத்தின் விதை துளிர்விட்ட நாள் இன்று என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசே வேர்களில் வெந்நீர் ஊற்றாதே என்று சாடியுள்ள அவர், எல்.ஐ.சி பங்கு விற்பனை முடிவைக் கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.