ராமேசுவர மீனவர்களின் படகின் மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
கச்சத்தீவு அருகே ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மீனவர்களின் படகு மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
இதையடுத்து மீனவர்களின் படகு கவிழ்ந்ததில் 7 மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்த நிலையில், வேறு படகிலிருந்த சக மீனவர்கள் அவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.