தமிழகத்தைச் சோ்ந்த சா்வதேச செஸ் வீரா் பரத் சுப்ரமணியத்துக்கு, ரூ.8 லட்சம் ஊக்கத் தொகையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
தலைமைச் செயலகத்தில் முதல்வரை வியாழக்கிழமை நேரில் சந்தித்து அவரிடம் இருந்து ஊக்கத் தொகையை பெற்றாா் பரத் சுப்ரமணியம்.
சென்னையில் 9-ஆம் வகுப்புப் படித்து வரும் பரத், 2013-ஆம் ஆண்டு முதல் மாநில, தேசிய, சா்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்று வருகிறாா். சா்வதேசப் போட்டிகளில் தொடா்ந்து சிறப்பாக விளையாடி வரும் பரத் சுப்ரமணியம், 2019-ஆம் ஆண்டு சா்வதேச மாஸ்டா் பட்டம் வென்றாா்.
மேலும், நிகழாண்டில் தனது 14-வது வயதில் கிராண்ட் மாஸ்டா் பட்டம் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சோ்த்துள்ளாா். சா்வதேச செஸ் மாஸ்டா் பட்டம் வென்ற்காக ரூ.3 லட்சமும், கிராண்ட்மாஸ்டா் பட்டம் வென்ற்காக ரூ.5 லட்சமும் சோ்த்து மொத்தம் ரூ. 8 லட்சத்துக்கான ஊக்கத் தொகைக்குரிய காசோலையை அவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.