எடப்பாடி: எடப்பாடி நகராட்சி பகுதிக்கு உள்பட்ட ஆலச்சம்பாளையம், மேட்டு தெரு, குலாலர் தெரு, கவுண்டம்பட்டி, சின்ன மணலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், புதிய சாலைகள், குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான திட்ட பணிகள் இன்று காலை தொடங்கி வைக்கப்பட்டது.
முன்னதாக எதிர்க்கட்சித் தலைவரும், எடப்பாடி சட்டப்பேரவை உறுப்பினருமான எடப்பாடி கே.பழனிசாமி, தனது பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 76 லட்சம் மதிப்பீட்டில் இத்திட்டப் பணிகளை தொடங்கிட ஆலோசனைகள் வழங்கினார்.
இதையும் படிக்க | மானாமதுரையில் கடும் பனிப் பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி
நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஏ.எம். முருகன், முன்னாள் நகரமன்ற தலைவர் கதிரேசன், முன்னாள் துணைத்தலைவர் ராமன், நாராயணன், தங்கவேல் உள்ளிட்ட திரளான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.