கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வீடு திரும்பினார்.
கரோனா பாதிப்புக்கு உள்ளாகி கி.வீரமணி (88) கிண்டியில் உள்ள கிங்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நலம் விசாரித்தனர்.
இதையும் படிக்க- தொல்லியல் அறிஞர் ஆர்.நாகசாமி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
இந்த நிலையில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வீடு திரும்பினார்.
இதுகுறித்து திராவிடா் கழகத் துணைத் தலைவா் கலி.பூங்குன்றன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா காரணமாக தமிழ்நாடு அரசின் கிண்டி கிங் இன்ஸ்டியூட் மருத்துவமனையில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நலமுடன் இல்லம் திரும்பினார்;
சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்று கூறியுள்ளாா்.