சையது மோடி சா்வதேச பாட்மின்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து கூறியுள்ளார்.
சையது மோடி சா்வதேச பாட்மின்டன் தொடரின் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இளம் வீராங்கனை மாளவிகா பன்சோட்டிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இதையும் படிக்க- தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்து வருகிறது: ராதாகிருஷ்ணன்
நாக்பூரை சேர்ந்த 20 வயதான மாளவிகா பன்சோட் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பல்கலை.யில் 2ஆம் ஆண்டு பி.டெக் படிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சையது மோடி சா்வதேச பாட்மின்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்டிவிட்டரில், சையது மோடி சர்வதேச பாட்மின்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி. வி. சிந்துவுக்கும், மிகச்சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டி வரை சென்று வெள்ளிப் பதக்கம் வென்ற எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவி மாளவிகா பன்சோட்டிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.