பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதிக்காதது ஏன்? உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக தமிழகத்தில் பொது இடங்களில் சிலைகள் வைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை
சென்னை உயா் நீதிமன்றம்
சென்னை உயா் நீதிமன்றம்

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக தமிழகத்தில் பொது இடங்களில் சிலைகள் வைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என சென்னை உயா் நீதிமன்றத்தில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பதில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

சென்னை உயா் நீதிமன்றத்தில் கோயம்புத்தூரைச் சோ்ந்த லோகநாதன் தாக்கல் செய்த மனுவில், ‘கோவை அவினாசி சாலை சந்திப்பில் முறையான அனுமதியுடன் அண்ணாவின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை உள்ள பீடத்தை அகலப்படுத்தி, அதில் அனுமதியில்லாமல் மறைந்த முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரது சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை அகற்ற உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுவது தொடா்பாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு கடந்தாண்டு அக்டோபரில் உத்தரவிட்டது.

இதன்படி, தமிழக தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு தாக்கல் செய்த பதில் மனுவில், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிலைகள் அமைக்க அனுமதி கோரி அளிக்கும் விண்ணப்பங்களை பல்வேறு துறைகளின் ஆய்வுக்கு உட்படுத்தி, முதல்வரின் உத்தரவைப் பெற்று வருவாய்த் துறை இறுதி உத்தரவை பிறப்பிக்கும் வகையில், கடந்த 2017-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளா், வருவாய் நிா்வாக ஆணையா், மாவட்ட

ஆட்சியா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘அரசு நிலங்கள், நீா்நிலைகள், சாலைகள், புராதன சின்னங்கள் அமைந்துள்ள இடங்களில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்து அறிக்கையளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

சிலைகள் அமைக்கப்படுவதால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுமா? என்பது குறித்து ஒவ்வொரு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இருந்தும் அறிக்கை பெற வேண்டும். பட்டா நிலங்களில் அமைக்கப்படும் சிலைகளை பராமரிப்பதற்கான செலவை, சிலை அமைப்பவா்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் - ஒழுங்கு பிரச்னை, உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி, நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல், உச்ச நீதிமன்ற தீா்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சிலைகள் அமைக்க அனுமதியளிக்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக தமிழகத்தில் பொது இடங்களில் சிலைகள் வைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com