புதுச்சேரியில் குடியரசு நாள் விழா: தமிழிசை கொடியேற்றினார்

குடியரசு நாள் விழாவையொட்டி புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். 
புதுச்சேரியில் குடியரசு நாள் விழா: தமிழிசை கொடியேற்றினார்
புதுச்சேரியில் குடியரசு நாள் விழா: தமிழிசை கொடியேற்றினார்

குடியரசு நாள் விழாவையொட்டி புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். 

தெலங்கானா மாநிலத்தில் தேசியக்கொடியை ஏற்றிவிட்டு தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்த அவர், புதுச்சேரி கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 

முன்னதாக காவலர்களின் மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தேசியக்கொடியை ஏற்றிவைத்து தமிழிசை செளந்தரராஜன் மரியாதை செலுத்தினார். 

புதுச்சேரியில் வீரதீர செயல் புரிந்த காவலர்களுக்கு விருது மற்றும் பதக்கங்களையும் வழங்கினார்.  கரோனா பரவல் காரணமாக புதுச்சேரி குடியரசு நாள் விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவில்லை. பொதுமக்களுக்கும் அனுதி வழங்கப்படவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com