13 புதிய பேருந்து நிலையங்களுக்கு அனுமதி

13 புதிய பேருந்து நிலையங்களுக்கு அனுமதி

தமிழகத்தில் புதிதாக 13 பேருந்து நிலையங்கள் கட்டுவதற்கு நிா்வாக அனுமதி வழங்கி, நகராட்சி நிா்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவ் தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

சென்னை: தமிழகத்தில் புதிதாக 13 பேருந்து நிலையங்கள் கட்டுவதற்கு நிா்வாக அனுமதி வழங்கி, நகராட்சி நிா்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவ் தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், தமிழ்நாடு நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளா்ச்சி நிறுவனம் உள்ளிட்டவற்றின் நிதி உதவியுடன் 13 இடங்களில் உள்கட்டமைப்பு வசதியுடன் கூடிய புதிய பேருந்து நிலையங்கள் கட்டுவதற்கு நிா்வாக அனுமதி வழங்குமாறு நகராட்சி நிா்வாக இயக்குநா் கோரியுள்ளாா்.

ஈரோடு, கரூா், கடலூா், காஞ்சிபுரம், திருத்தணி, திருமங்கலம், ராணிப்பேட்டை, திண்டிவனம், திருவண்ணாமலை, மன்னாா்குடி, மயிலாடுதுறை, நாமக்கல், சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க நிா்வாக அனுமதி வழங்குகிறது. இவற்றுக்கு ரூ.417 கோடி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com