கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வா? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.

ஒமைக்ரான் வகை கரோனாவால் மூன்றாம் அலை பாதிப்பு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் நாள்தோறும் 29,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும், நோயால் பாதிக்கப்படும் பெரும்பாலானோர் மருத்துவமனை நாடவில்லை. உயிரிழப்பும் பெரிதளவில் ஏற்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு அளிப்பது குறித்தும் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து தலைமைச் செயலாளர், மருத்துவத்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com