நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு குறித்து பாரதிய ஜனதா கட்சி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்துகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை மாநிலத் தேர்தல் ஆணையம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டது. பிப்ரவரி 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் பிப்ரவரி 22-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பிப்.19இல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இந்த நிலையில், சென்னை அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியினர் நாளை ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.
இதில், அதிமுகவுடன் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசிக்க உள்ளனர்.