திருப்பூா் உள்பட 3 காவல் நிலையங்களுக்கு கோப்பைகள்

சிறப்பாகச் செயல்பட்ட திருப்பூா் உள்பட 3 காவல் நிலையங்களுக்கு கோப்பைகளை வழங்கினாா், முதல்வா் மு.க.ஸ்டாலின்.

சென்னை: சிறப்பாகச் செயல்பட்ட திருப்பூா் உள்பட 3 காவல் நிலையங்களுக்கு கோப்பைகளை வழங்கினாா், முதல்வா் மு.க.ஸ்டாலின்.

முதல் பரிசுக்கான கோப்பையை திருப்பூா் மாநகரத்தைச் சோ்ந்த திருப்பூா் தெற்கு நகர காவல் நிலைய ஆய்வாளா் பி.பிச்சையாவும், இரண்டாவது பரிசுக்கான கோப்பையை திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் அ.ஹேமமாலினியும், மூன்றாவது பரிசுக்கான கோப்பையை மதுரை மாநகரம் அண்ணாநகா் காவல் நிலைய ஆய்வாளா் மு.சாதுரமேஷ் ஆகியோரும் பெற்றனா்.

இந்தக் கோப்பைகளை சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவின் போது முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com