நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடைபெறும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு தேதிகளில் மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கையானது பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே மாணவர்களுக்கான பருவத் தேர்வுத் தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டதால் தற்போது சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நாளான பிப்.19இல் நடைபெறவிருந்த தேர்வுகள் மார்ச் 5, 6, 9 மற்றும் 11ஆம் தேதிகளுக்கு மாற்றம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.