நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டிலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக பிப்ரவரி 19-இல் நடைபெற உள்ளது. பிப். 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியுள்ளது. பிப்ரவரி 4ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை வேட்பு மனுத் தாக்கல் நடைபெறவுள்ளன. வேட்புமனு பரிசீலனை பிப். 5-ஆம் தேதி நடைபெறும். பிப். 7-ஆம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டிலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ளார்.