மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,512 கன அடியாகக் குறைந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறையத் தொடங்கியுள்ளது.
நேற்று காலை வினாடிக்கு 3,555 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 2,512 கன அடியாகக் குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று காலை 104.22 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 103.59 அடியாக சரிந்தது.
அணையின் நீர் இருப்பு 69.57 டி.எம்.சியாக இருந்தது.