புதுச்சேரியில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவு

புதுச்சேரியில் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.  
கோப்புப்படம்
கோப்புப்படம்

புதுச்சேரியில் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார். 

புதுவை மாநிலத்தில் கரோனா பாதிப்பு கடந்த சில நாள்களாக தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 101 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 452ஆக உயர்ந்துள்ளது.

புதுவை மாநிலத்தில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் அரசு ஊழியர்கள், பொதுத்துறை, வணிகநிறுவனங்களில் பணிபுரிவோர் 100% தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com