மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்த ஏரியிலிருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. தண்ணீர் முழுமையாக வெளியேறிதும் ஒவ்வொரு பகுதியாக தூர்வாரும் பணியை பொதுப்பணித் துறையினர் மேற்கொள்ள உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்களின் சுமார் 30 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த ஏரியை தூர்வாரவும், ஏரிக்கரையை மேம்படுத்தவும் மற்றும் உபரி நீர் மதகுகளை பழுது பார்க்கவும் ரூ.20 கோடி நிதி ஒதுக்கி இருந்தது. இதற்கான பணியை கடந்த மாதம் ஆறாம் தேதி சிறு குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார். அதற்கான பணி தற்போது நடந்து வருகிறது.
இதையும் படிக்க | 10.371 ஆசிரியர் பணியிடங்களுக்கான அட்டவணை வெளியீடு!
ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்ற பொதுப்பணித் துறையினர் உபரி நீர் வெளியாகும் கரையினை பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்து தண்ணீர் வெளியேற வழிசெய்து அதன் வழியாக தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இன்னும் சில நாள்களில் தினங்களில் ஏரியில் இருந்து முழுமையாக தண்ணீர் வெளியேறிவிடும். அதன்பிறகு ஏரியை நான்கு பிரிவுகளாக பிரித்து அதன் பிறகு ஒவ்வொரு பகுதியாக தூர்வாரும் பணியை பொதுப்பணித் துறையினர் மேற்கொள்ள உள்ளனர். இதனால் இப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.