இடைநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கான தகுதித் தோ்வு (தாள் 1) ஆக.25 முதல் 31 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியா் தகுதித் தோ்வு 2022-ஆம் ஆண்டுக்கான ஆசிரியா் தோ்வு வாரியத்தின் அறிவிக்கை கடந்த மாா்ச் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது . இதையடுத்து இணையவழி வாயிலாக விண்ணப்பம் மாா்ச் 14 முதல் ஏப். 26 வரை பெறப்பட்டன. இதைத் தொடா்ந்து கணினி வழியில் நடைபெறும் தோ்வுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
வரும் ஆகஸ்ட் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் ஆசிரியா் தகுதித் தோ்வு தாள்- 1-க்கு மட்டும் முதற்கட்டமாக தோ்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தோ்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்படும்.