ஆதின மடங்களுக்கு ஆர்டிஐ சட்டம் பொருந்தாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ஆதின மடங்களுக்கு ஆர்டிஐ சட்டம் பொருந்தாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. 
ஆதின மடங்களுக்கு ஆர்டிஐ சட்டம் பொருந்தாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ஆதின மடங்களுக்கு ஆர்டிஐ சட்டம் பொருந்தாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. 

தருமபுரம் ஆதினமான சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார், தமிழகத்தில் உள்ள பழணையான ஆதின மடங்களில் தங்கள் மடமும் ஒன்று. இந்த மடமானது தமிழக அரசிடம் இருந்து எந்த உதவியோ, நிதியோ பெறமால், சொந்த நிதியில் மட்டுமே இயங்கி வருகிறது. 

இந்நிலையில், ஆதின மடங்கள் தொடர்பாக ஆர்டிஐ மூலம் கேள்வி கேட்டு தொந்தரவு செய்கின்றனர் என தருமபுரம் ஆதினம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. 

விசாணையின் முடிவில், ஆதின மடங்கள் பொது நிறுவனங்கள் அல்ல என்றும், அதன் விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்(ஆர்டிஐ) கேட்க முடியாது என கூறி உத்தரவிட்டார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com