தமிழ்நாட்டில் புதிதாக 2,671 பேருக்கு கரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக 2671 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. 
தமிழ்நாட்டில் புதிதாக 2,671 பேருக்கு கரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக 2671 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 2,671 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,98,992 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 2516 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 34,42,122 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் ஒருவர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 38,028 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 18,842 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில்  1011 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com