சிப்பாய் புரட்சி நினைவுத் தூணுக்கு நாளை மரியாதை செலுத்துகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி

வேலூர் மாவட்டத்தில் வேலூர் சிப்பாய் புரட்சி தினத்தை நினைவுகூரும் வகையில் சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை மரியாதை செலுத்துகிறார்.
சிப்பாய் புரட்சி நினைவுத் தூணுக்கு நாளை மரியாதை செலுத்துகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி

வேலூர் மாவட்டத்தில் வேலூர் சிப்பாய் புரட்சி தினத்தை நினைவுகூரும் வகையில் சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை மரியாதை செலுத்துகிறார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 10.07.2022 அன்று (ஞாயிற்று கிழமை) காலை 10.00 மணிக்கு வேலூர் மாவட்டத்தில் வேலூர் சிப்பாய் புரட்சி நாளை நினைவுகூரும் வகையில் சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்.
தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி வேலூர் கோட்டை மைதானத்திற்கு வருகை தந்து, ஐஎன்ஏ வீரர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், என்.சி.சி மாணவர்கள் , என்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சித்தலைவர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
ஆளுநர் தனது பயணத்தின் போது வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படை வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நல வாரிய உறுப்பினர்களுடன் கலந்துரையாடுகிறார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com