அதிமுகவில் எப்போதும் ஓ.பன்னீர்செல்வம் தான் ஒருங்கிணைப்பாளர் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பொதுக்குழு தடை தொடர்பாக திங்கள்கிழமை காலை நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும், நீதிமன்ற தீர்ப்பை நிச்சயம் மதிப்போம். தீர்ப்புக்குப் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்வோம்.
இதையும் படிக்க | அதிமுகவில் இணைகிறார் திவாகரன்!
மேலும், அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அதனை 2,600 பேர் தடுத்துவிட முடியாது என வைத்திலிங்கம் கூறினார்.