அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.
சென்னை உயநீதிமன்ற உத்தரவை அடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்றது. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், அடுத்த 4 மாதங்களில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தவும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கும் சிறப்புத் தீர்மானம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது உள்ளிட்டவற்றை எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது, பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டது, கட்சி விதிகளில் மாற்றங்கள் குறித்த தீர்மானங்கள் உள்ளிட்டவை மின்னஞ்சல் மூலமாக இபிஎஸ் தரப்பு , தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.