திமுகவுடன் கைகோர்த்துக்கொண்டு தரம் தாழ்ந்த மனிதராக ஓபிஎஸ் செயல்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓபிஎஸ் இன்று மிகவும் தரம் தாழ்ந்த செயலில் ஈடுபட்டுள்ளார். அவரது செயலை யாரும் ஏற்க மாட்டார்கள்.
எம்ஜி ஆர் உருவாக்கிய தலைமை அலுவலகத்தில் தடாலடியாக நுழைந்து ஆவணங்களை கைப்பற்றியிருக்கிறார். அவர் திமுகவின் கைக்கூலியாக செயல்படுகிறார்.
இதையும் படிக்க | அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல்
அவரது இந்த தரம் தாழ்ந்த செயல் கண்டனத்திற்குரியது மற்றும் வெட்கத்திற்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
முன்னதாகவே, சமூக விரோதிகள் நுழைவார்கள், பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என காவல்துறையிடம் கூறியுள்ளோம். ஆனால், திமுக, ஓபிஎஸ்ஸை கைக்குள் போட்டுகொண்டு இந்த வேலையை செய்துள்ளது.
திமுகவின் உள்கட்சி விவகாரத்தில் அதிமுக தலையிடவில்லை. ஆனால், திமுக ஓபிஎஸ்ஸுடன் கைகோர்த்துள்ளது.
எத்தனை ஸ்டாலின் வந்தாலும், ஓபிஎஸ் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்யமுடியாது.
அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது குறித்து சட்டப்படி எதிர்கொள்வோம் என்றார்.
இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழுவும் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும்!