அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையத்தில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் நேரில் சென்று தாக்கல் செய்தார்.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு உள்பட 16 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், தில்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்திற்கு இன்று நேரில் சென்ற சி.வி.சண்முகம், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அதிகாரிகளிடம் சமர்பித்தார்.
இதையும் படிக்க | ஜூலை 17-ல் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் சி.வி. சண்முகம் பேசியதாவது, “எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு 2,428 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்” என்றார்.