கம்பம்: தேனி மாவட்டம், லோயர் கேம்ப் குமுளி மலைச்சாலையில் புதன்கிழமை மண் சரிவு ஏற்பட்டது.
தேனி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை லோயர் கேம்ப்பிலிருந்து குமுளி செல்லும் மலைப்பாதையில் இரச்சல் பாலம் அருகில் உள்ள கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையை பயன்படுத்தும் தமிழக கேரள வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
இதையும் படிக்க | மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5.37அடி உயர்வு
இது குறித்து குமுளி காவல் நிலைய போலீசார் கூறியது, தொடர் மழை காரணமாக லோயர் கேம்ப் குமுளி மலைச்சாலை கண்காணிக்கப்படுகிறது. மேலும், இது பற்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையக அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். இரவு மலைப்பாதையில் ரோந்து பணி நடைபெறுகிறது என்றார்.
மண் சரிவை உடனே அகற்றி போக்குவரத்தை போலீசார் சீரமைத்தனர்.