திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், நரசிம்மம் பிரம்மோற்சவத்தின் பிரதான நாளான புதன்கிழமை காலை தேர் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியான மிகவும் பழமை வாய்ந்த 108 திவ்ய தரிசனத்திற்கு ஒன்றான அருள்மிகு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் நரசிம்மர் சுவாமி பிரம்மோற்சவம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான புதன்கிழமை திருத்தேர் உற்சவம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
திருத்தேரியில் இருந்து பக்தர்கள் அனைவருக்கும் நரசிம்ம சுவாமி அருள் புரிந்தார்.