சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது வேதனையை ஏற்படுத்துகிறது என்றார் வி.கே. சசிகலா.
மயிலாடுதுறையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
நான் ஏற்கெனவே அதிமுக பொதுச் செயலாளராகத்தான் உள்ளேன். அவர்கள்தான் சண்டையிட்டுக் கொள்கின்றனர். அதிமுகவின் பொன்விழா ஆண்டில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது வேதனையை ஏற்படுத்துகிறது. தலைவர் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளக் கூடாது. அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் தான் அதை சொல்ல வேண்டும். தேர்தலில் அளித்த பெரும்பான்மையான வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்றார்.