கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு சோனியா காந்தி நலம் விசாரித்தார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிக்க: முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி
அவர் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்களும் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்துப் பேசினார்.