முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் நலம் பெற வாழ்த்துத் தெரிவித்து, உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி கடிதம் எழுதியுள்ளாா். இந்தத் தகவலை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவா் விரைவில் நலம் பெற ஆளுநா் உள்பட பல்வேறு தரப்பினரும் விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனா். அதன்படி, உயா் நீதிமன்ற தலைமை நீதிபதியும் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.