சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஆகிய மாவடடங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க: விமான நிலையங்களில் குரங்கு அம்மை நோய் பரிசோதனை
சென்னையை பொறுத்தவரை 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும்.
ஜூலை 19 மற்றும் 20-ல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.