ஆடி அமாவாசை: மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில் சிறப்பு ஏற்பாடு

ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு இலவசமாக தர்ப்பணம் செய்ய மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு இலவசமாக தர்ப்பணம் செய்ய மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

28 -ஆம் தேதி வியாழக்கிழமை ஆடி அமாவாசை அன்றைய தினம் காலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை பட்டினப்பாக்கம் கடற்கரையில் தர்ப்பணம் செய்ய வருவோருக்கு பூஜைக்கு வேண்டிய அனைத்து பொருட்களும், மந்திரத்தை உச்சரிக்க புரோஹிதரும் இலவசமாக கோயிலின் சார்பில் செய்யப்பட்டுள்ளது. 

இந் நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்ய விரும்புவோர் மேலும் கூடுதல் தகவல்களுக்கு தொலைபேசி 044 28171197, 28172197, 28175197, செல்லிடப்பேசி 9444 290 707 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளுமாறு கோயில் நிர்வாக அதிகாரி அனிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com