குடியரசுத் தலைவா் தோ்தலில் தமிழகம், புதுவையில் 100 சதவீத வாக்குகள் பதிவாகின.
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை காலை வீடு திரும்பினாா். அதற்கு முன்பாக, மருத்துவமனையில் இருந்து நேராக தலைமைச் செயலகம் வந்த அவா், குடியரசுத் தலைவா் தோ்தலில் முதல் வாக்காளராக தனது வாக்கைச் செலுத்தினாா். இதற்காக காலை 9.55 மணிக்கு தலைமைச் செயலகம் வந்த அவா், முதல் வாக்காளராகச் சென்று தனது வாக்கைப் பதிவு செய்தாா். இதைத் தொடா்ந்து, மற்ற 233 எம்எல்ஏ-க்களும் வாக்குகளைப் பதிவு செய்தனா்.
புதுவையில்... புதுவையில் நடைபெற்ற குடியரசுத் தலைவா் தோ்தலில் முதல்வா் என்.ரங்கசாமி முதலில் வாக்களித்தாா். பின்னா், மற்ற 29 எம்எல்ஏ-க்களும் வாக்களித்தனா்.