திருக்குவளை: நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அஞ்சுகம் முத்துவேல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தொழில் மையம் சார்பில் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இம்முகாமிற்கு திருக்குறளை ஊராட்சி தலைவர் இல.பழனியப்பன் தலைமை வகித்தார். கீழையூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) எஸ்.வெற்றிச்செல்வன், ஒன்றிய கவுன்சிலர் சுதா அருணகிரி ஆகியோர் முன்னிலை வகித்தார்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இதையும் படிக்க | மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 76,645 கன அடியாக சரிவு
இம்முகாமில் மாவட்ட தொழில் மையத்தின் பொதுமேலாளர் இரா.ரமணி பங்கேற்று சுயதொழில் தொடங்க கடன் வழங்கல் மற்றும் மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெறுவதும், எவ்வாறு விண்ணப்பிப்பது மற்றும் அதுதொடர்பான பயிற்சி குறித்து விளக்கமளித்து பேசினார்.
இம்முகாமில் புள்ளி விவர ஆய்வாளர் விஜய் ஆனந்த், உதவி பொறியாளர் மு.அஜெய்விக்னேஷ்வர்,தொழில் கூட்டுறவு அலுவலர் கோ.கோமகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதில் இளைஞர்கள், பெண்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.