திருவள்ளூரில் போலியான பத்திரப் பதிவு செய்ததாக சார் பதிவாளரை பணியிடை நீக்கம் செய்து பத்திரப்பதிவு ஐஜி உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் சார் ஆட்சியராக பணியாற்றி வருபவர் சுமதி. இந்நிலையில் ஆவடி மோரை கிராமத்தில் உள்ள ஒருவரின் நிலத்தைப் போலியாக ஆவணம் தயார் செய்து திருவள்ளூர் சார் பதிவு அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்துள்ளதாகவும், போலியான ஆவணங்கள் கொண்டு அதிகளவில் பத்திரப்பதிவு திருமணங்கள் செய்து வைத்தாகவும் அவர் மீது தொடர்ந்து பத்திரப்பதிவு ஐஜிக்கு புகார் சென்றது.
இதையடுத்து சார் பதிவாளர் சுமதியை தற்காலிக பணிநீக்கம் செய்து பத்திரப்பதிவு ஐஜி சிவனருள் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் திருவள்ளூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் அவதியுற்றனர்.