நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 21 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தஞ்சையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து அனுசரிக்கப்பட்டது.
தஞ்சை மேயர் சண். ராமநாதன் சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சிவாஜியின் புகழ் ஒங்குக என்று முழக்கமிட்டனர்.
இதையும் படிக்க | தமிழக அரசை கண்டித்து தடையை மீறி ஊர்வலம்: பாஜகவினர் 62 பேர் கைது
இது குறித்து சிவாஜி ரசிகர் மன்ற நிர்வாகி சிவாஜி சதா கூறுகையில், தஞ்சையில் சிவாஜி சிலை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு சிவாஜி பேருந்து நிறுத்தம் என்று பெயர் சூட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், திருச்சி பாலக்கரையில் 12 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் சிவாஜி சிலையை தமிழக அரசு திறக்க வேண்டும் என ரசிகர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.