வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு: மநீம வரவேற்பு 

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சட்டத் திருத்தத்திற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது. 
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு: மநீம வரவேற்பு 

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சட்டத் திருத்தத்திற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிலையில், தமிழகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளைத் தொடங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதை மநீம வரவேற்கிறது. இந்நடவடிக்கையானது போலி வாக்காளர்களை நீக்குவதற்கு உதவும்: கள்ள ஓட்டுகளைத் தடுக்கும்.

அதேசமயத்தில் வாக்காளரை வற்புறுத்தி ஆதார் எண்ணைப் பெறக்கூடாது, முழு சம்மதத்துடன் பெற வேண்டுமெனவும் இச்சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படும்  என்பதை தேர்தல்  ஆணையம் உறுதிப்படுத்தவேண்டும்.

ஜனநாயகத்தின் அடிநாதமான “நேர்மையான தேர்தலுக்கு” இதுபோன்ற தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியமானது. மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். மக்கள் நீதி மய்யம் அப்பணியை தொடர்ந்து செய்யும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com