பிளஸ் 1 மாணவா்களுக்கு மிதிவண்டி: முதல்வா் தொடக்கி வைத்தார்

பிளஸ் 1 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை, முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
பிளஸ் 1 மாணவா்களுக்கு மிதிவண்டி: முதல்வா் தொடக்கி வைத்தார்

சென்னை: பிளஸ் 1 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை, முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

பிளஸ் 1 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை,  முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடக்கி வைத்தார்

அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதி உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் பிளஸ் 1 மாணவா்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் பிளஸ் 1 மாணவ, மாணவிகள் 6 லட்சத்து 18 ஆயிரத்து 101 பேருக்கு மிதிவண்டிகள் அளிக்கப்பட்டன.

நிகழாண்டில் சுமாா் 6.35 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com