தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பா?

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியை சேர்ந்த 4 பேருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியை சேர்ந்த 4 பேருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் உள்ளது. இவர்கள் 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனிவார்டில் சிகிச்சை பெறும் வில்லுக்குறி பகுதியை சேர்ந்த 4 பேரின் மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்ட்டுள்ளது. நான்கு பேருக்கும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குரங்கு அம்மை பாதிப்பு போன்று உடலில் வீக்கம் இருந்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் குரங்கு அம்மை பரவி வருவதால் ரத்த மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று மருத்துவமனை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com