செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் உலகத் தரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதற்காக அனைத்துத் தரப்புகளில் இருந்தும் குவிந்து வரும் பாராட்டுகளால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.
இதையும் படிக்க- தமிழகத்தில் மேலும் 1,467 பேருக்கு கரோனா
பன்னாட்டு செஸ் ஒலிம்பியாட்டின் வெற்றிக்காக அயராது பாடுபட்டு வரும் அதிகாரப்பூர்வக் குழுவினரை ஊக்கப்படுத்துவதற்காக மாமல்லபுரத்தில்
பன்னாட்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் இடத்துக்கு, கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்துடன் இன்று நேரில் சென்று பார்வையிட்டேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது பாலஸ்தீன் நாட்டைச் சேர்ந்த 8 வயது இளம் போட்டியாளர் ராண்டா சேடாருக்கு கைகொடுத்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.