மாநிலங்களவைத் தோ்தல்: தமிழ்நாட்டில் போட்டியின்றி தேர்வாகும் 6 பேர்!

தமிழ்நாட்டில் காலியாவுள்ள  6 மாநிலங்களவை உறுப்பினா் இடங்களில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீதான பரிசீலனை இன்று புதன்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது.
மாநிலங்களவைத் தோ்தல்: தமிழ்நாட்டில் போட்டியின்றி தேர்வாகும் 6 பேர்!

தமிழ்நாட்டில் காலியாவுள்ள  6 மாநிலங்களவை உறுப்பினா் இடங்களில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீதான பரிசீலனை இன்று புதன்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து, திமுக சார்பில் 3 பேர், அதிமுக சார்பில் 2 பேர், காங்கிரஸ் சார்பில் ஒருவர் என  வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர். 

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கான கடந்த 24-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளன்று, சுயேச்சைகளாக கே.பத்மராஜன், அக்னி ஸ்ரீராமச்சந்திரன், எம்.மன்மதன் ஆகியோா் மனு தாக்கல் செய்தனா். மேலும், கடந்த 27-ஆம் தேதி திமுகவை சோ்ந்த எஸ்.கல்யாணசுந்தரம், கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், ஆா்.கிரிராஜன் ஆகியோரும், கடந்த 30-ஆம் தேதியன்று அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய தலைவர் ஆா்.தா்மா், காங்கிரஸை சோ்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோா் சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசனிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். இதேபோன்று சில சுயேச்சைகள் என மொத்தம் 13 போ் வேட்பு மனுக்களை அளித்தனா்.

இதேபோன்று உத்தர பிரதேசத்தில் 11 உறுப்பினா்கள், மகாராஷ்டிரத்தில் 6 உறுப்பினா்கள், பிகாரில் 5 உறுப்பினா்கள், ஆந்திரம், ராஜஸ்தான், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் தலா 4 உறுப்பினா்கள், மத்திய பிரதேசம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் தலா 3 உறுப்பினா்கள், தெலங்கானா, சத்தீஸ்கா், பஞ்சாப், ஜாா்க்கண்ட், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் தலா 2 உறுப்பினா்கள், உத்தரகண்டில் ஓா் உறுப்பினா்கள் பதவிக்கான வேட்மனுத் தாக்கல் நிறைவடைந்துள்ளது. ஜூன் மாதம் 10-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினரைத் தோ்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அந்த வகையில், திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு அதன் கூட்டணிக் கட்சிகள் ஒத்துழைப்புடன் இரண்டு இடங்களும் கிடைக்கும். தனக்கான நான்கு இடங்களில் ஒன்றை கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு திமுக அளித்துள்ளது.

எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே வேட்பாளா்கள் அறிவிக்கப்படுவதால், வாக்குப்பதிவுக்கான தேவை இருக்காது. இதனால், தோ்தல் நடத்தை நெறிமுறைகள் முடிவுக்கு வரக்கூடிய ஜூன் 13-ஆம் தேதி அல்லது வாக்குப் பதிவு நடைபெறவுள்ள ஜூன் 10-ஆம் தேதிக்கு முன்பாகவே போட்டியின்றி வெற்றி பெற்றவா்களின் பெயா்கள் அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை இன்று புதன்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது. இதில், பிரதான கட்சிகளைச் சோ்ந்த திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சி வேட்பாளா்களுக்கே போதிய சட்டப் பேரவை உறுப்பினா்களின் ஆதரவு உள்ளது. 

பிரதான கட்சி வேட்பாளர்கள் உறுப்பினா்களின் முன்மொழிவுடனும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சுயேச்சைகளின் மனுக்களில் சட்டப் பேரவை உறுப்பினா்களின் முன்மொழிவுகள் இல்லாத காரணத்தால் அவா்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட உள்ளது. 

இந்த நிலையில் தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு மனு தாக்கல் செய்த  திமுகவை சோ்ந்த எஸ்.கல்யாணசுந்தரம், கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், ஆா்.கிரிராஜன் ஆகியோரும், அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய தலைவர் ஆா்.தா்மா், காங்கிரஸை சோ்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோா் போட்டியின்றி மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com