ஆணையாம்பட்டியில் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு

ஆணையாம்பட்டியில் 60 அடி ஆழ விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
ஆணையாம்பட்டியில் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு

ஆணையாம்பட்டியில் 60 அடி ஆழ விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி ஊராட்சி, காட்டுக்கொட்டாய், அண்ணாபுரத்தைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் என்பவரின் 60 அடி ஆழ  விவசாயக் கிணற்றில், அவரது பசுமாடு தவறி விழுந்து தத்தளித்தது. 

தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) வேலுமணி தலைமையில் தீயணைப்புத் துறையினர் பசுமாட்டை உயிருடன் மீட்டு, மாட்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com